×

எங்களுக்கு மட்டும் ஏன் லேப்டாப் தர மாட்டேங்கிறீங்க சின்னாளபட்டி மாணவர்கள் கேள்வி

திண்டுக்கல், ஜன. 26: சின்னாளபட்டி பகுதியில் 2018ம் ஆண்டில் படித்த மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
சின்னாளபட்டி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து மனு அளித்தனர். அந்த மனுவில், ‘திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2017-18ம் ஆண்டு படித்த மாணவ, மாணவிகளுக்கு அரசு இதுவரை இலவச லேப்டாப் வழங்கவில்லை. எங்களுக்கு முன்பு படித்தவர்களுக்கு கூட லேப்டாப் வழங்கி விட்டனர்.

ஆனால் எங்களுக்கு மட்டும் இதுவரை லேப்டாப் வழங்கவில்லை. இது பாரபட்சமான முடிவாகும். இதனால் நாங்கள் மனஉளைச்சலில் தவித்து வருகிறோம். நாங்கள் 18 வயது பூர்த்தியடைந்து புதிய வாக்காளர்களாக ஆகியுள்ளோம். எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வரும் சட்டமன்ற தேர்தலில் ஓட்டு ேபாட மாட்டோம்’ என கூறியிருந்தனர்.

Tags : Chinnalapatti ,
× RELATED சின்னாளபட்டி அருகே தீயில் கருகி 40...