காங்கயம், ஜன.26:காங்கயம் அருகே உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் நேற்று காளை மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கயம் அருகே படியூரில் உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.