தேர்த்திருவிழா

வால்பாறை, ஜன. 26: வால்பாறை திருஇருதய ஆலய திருவிழா மற்றும் புனித செபஸ்தியார் திருவிழா நடைபெற்றது. கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சனிக்கிழமை மாலை ஆலய பங்கு தந்தை அருட்தந்தை மரிய ஜோசப் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

 திருஇருதய ஆண்டவர் புனித செபஸ்தியார் ஆகியோரின் திருவுருவ சிலைகள் ஆலயத்தை சுற்றி தேர்பவனி நடைபெற்றது. இறுதிநாளான நேற்று முடீஸ் அந்தோனியார் ஆலய பங்கு தந்தை மரிய ஆண்டனி தலைமையில் கூட்டுபாடல் பலி நடைபெற்றது. இதில் பங்கு மக்கள் திரளாக பங்கேற்றனர். அதன்பின் அம்புநேர்ச்சை பவனி நடைபெற்றது.

Related Stories: