திமுக சார்பில் இலவச மரக்கன்று வினியோகம்

பொள்ளாச்சி, ஜன. 26: பொள்ளாச்சி நகர திமுக, 6வது வார்டு வட்ட கிளைக்கழகம் சார்பில் நேற்று, பிளாஸ்டிக் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்போம் என்ற பிரசாரத்துடன், மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு, நகர பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி துணை தலைவர் தமிழ்மணி, மாநில நெசவாளர் அணி செயலாளர் குள்ளக்காபாளையம் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்ட செயலாளர் விஜயகுமார் வரைவேற்றார்.  இதில், மாவட்ட பொறுப்பாளர் தென்றல்செல்வராஜ் நாட்டு பப்பாளி விதை பந்து மற்றும் மா, வேப்பன், நாவல், கொய்யா, வில்வம், சப்போட்டா உள்ளிட்ட மரக்கன்றுகளை சுமார் 100க்கும் மேற்பட்டோருக்கு வழங்கினார். இதில், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அமுதபாரதி, நகர  துணை செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் தர்மராஜ், சாந்துமுகமது, முன்னாள் கவுன்சிலர் தர்மலிங்கம், கண்ணன், மணிகண்டன், மகாதேவன் , சார்பு அணி நிர்வாகிகள் அப்துல்சத்தார், தங்கவேலு, சதீஸ்குமார், போஜராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: