பந்தலூர்,ஜன.26: பந்தலூர் அருகே கையுன்னி மங்கரை மற்றும் குந்தலாடி ஓர்கடவு பகுதிகளில் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வாரவிழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி கையுன்னி மங்கரை மற்றும் நெலாக்கோட்டை ஊராட்சி குந்தலாடி ஓர்கடவு ஆகிய பழங்குடியினர் கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை சார்பில் மனித நேய வாரவிழா நேற்று நடைப்பெற்றது.