கே.ஐ.டி. கல்லூரியில் கலந்துரையாடல்

கோவை, ஜன. 26:  கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி தொழில் நுட்ப கல்லூரியில் (கே.ஐ.டி.) தொழில் நிறுவனங்களின் கலந்துரையாடல் நிகழ்வு நடந்தது. 2 மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கான இலக்கு, முக்கிய அம்சம் குறித்து இந்த நிகழ்ச்சியில் விளக்கம் தரப்பட்டது. மாணவர்களின் திறன் மேம்படுத்துவதற்கும், சுய சார்புடையவர்களாக திகழவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கல்லூரியின் முதல்வர் மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வர் ரமேஷ், பேராசிரியர் மகாலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: