அந்தியூர், ஜன. 26: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளப்பிள்ளையார் கோவில் அருகே பர்கூர் செல்லும் ரோட்டிலன் ஓரத்தில் புதியதாக டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்கு அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கடையை திறக்கக்கூடாது என பல முறை கட்சியினர் சார்பில் அதிகாரிகளிடத்தில் மனு கொடுத்தும் இது வரை யாரும் இது சம்பந்தமாக எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருப்பினும் அதிகாரிகள் கடையை திறப்பதற்கே மும்மரம் காட்டி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் இடையூறு ஏற்படும் என்பதால், புதியதாக இங்கு அரசு மதுபானக் கடையை திறக்கக்கூடாது என வலியுறுத்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.