சத்தியமங்கலம், ஜன. 26: சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழகம் கர்நாடகம் இரு மாநிலங்களுக்கிடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருந்து செண்டுமல்லி பூ பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலம் அருகே புதுவடவள்ளி பகுதியில் உள்ள தனியார் செண்டுமல்லி ஆலைக்கு செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது.