டாஸ்மாக் சூபர்வைசரை தாக்கி ரூ.7 லட்சம் பறித்து சென்ற 6 பேர் கைது: பணம், ஆயுதங்கள் பறிமுதல்

செய்யூர்,  ஜன 26: செய்யூர் அடுத்த இரும்பேடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (45). செய்யூர் அடுத்த பாலூர் டாஸ்மாக் கடையில் சூபர்வைசராக வேலை பார்க்கிறார். கடந்த 17ம் தேதி இரவு சுரேஷ்குமார், வியாபாரம் முடிந்ததும், கடையை மூடி விட்டு விற்பனையான ரூ.7.8 லட்சத்துடன் பைக்கில் உதவியாளருடன் வீட்டுக்கு புறப்பட்டார். அம்மனூர் அருகே சென்றபோது, அவர்களை வழிமறித்த மர்மநபர்கள், 2 பேரையும் சரமாரியாக தாக்கி, அரிவாளால் வெட்டிவிட்டு பணத்தை பறித்து சென்றனர்.

புகாரின்படி செய்யூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்யூர் அடுத்த நைனார் குப்பத்தை சேர்ந்த ஏழுமலை (45), மடையம்பாக்கம் கிராமம் பார்த்திபன் (31)  ஆகியோரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அதில், சூனாம்பேடு புருஷோத்தமன் (56), மரக்காணம் அப்பு (எ) ராஜேஷ் (27), ராகுல் (23), ராஜேஷ் (23) ஆகியோருடன் சேர்ந்து டாஸ்மாக் சூபர்வைசர் சுரேஷ்குமாரை தாக்கி, பணத்தை பறித்து சென்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார், நேற்று காலை 4 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம், பட்டாக்கத்தி, பட்டன் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: