மதுராந்தகம், ஜன. 26: தமிழ்நாடு கட்டுமான உடலுழைப்பு தொழிலாளர் நல மத்திய ஐக்கிய சங்கம் சார்பில், தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் மதுராந்தகம் தேரடி தெருவில் நேற்று நடந்தது. சங்க மாநில தலைவர் வி.ஜே.குமார் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் எம்.எல்.ராஜசேகர் வரவேற்றார். மாநில பொருளாளர் ஏ.ஜான்விஜயகுமார். சங்க ஆலோசகர் எல்.ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக அமைப்புசாரா தொழிலாளர் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகி இரா.கீதா, கட்டுமான அமைப்பு சாரா சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் கே.வி.திருப்பதி, பொறியாளர் என்.பி.நடராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் தங்க பெரு.தமிழமுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.