அதிமுக அரசின் ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகிவிட்டனர்: திமுக எம்எல்ஏ பேச்சு

கூடுவாஞ்சேரி, ஜன. 26:  அதிமுக அரசின் ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகிவிட்டனர் என மக்கள் கிராம சபை கூட்டத்தில், திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் பேசினார். காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் பெருமாட்டுநல்லூர், குமிழி, கல்வாய் ஆகிய ஊராட்சிகளில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆராமுதன் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் ஆப்பூர் சந்தானம், கே.எஸ்.ரவி, மேகநாதன், தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் அணி துணை அமைப்பாளர் வி.கே.பிரபு வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டனர். அப்போது பேசிய எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், திமுக ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும். மேலும், அதிமுக அரசின் ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகிவிட்டனர் என்றார். பின்னர், சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டிகள் வழங்கினார்.

இதில் தொழிலதிபர் ஆப்பூர் மதுசூதனன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜே.ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விஜயகுமார், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சோ.ஆறுமுகம், கே.எஸ்.ரவி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஏ.வி.எம்.இளங்கோவன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் கருணாகரன் உள்பட  பலர் கலந்துக்கொண்டனர்.

Related Stories: