மாமல்லபுரம், ஜன. 26: சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் ராஜ்குமார். நேற்று அதிகாலையில் ராஜ்குமார், தனது நண்பர்கள் 3 பேருடன், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கூட்ரோடு அருகே உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, காரில் புறப்பட்டார். அதிகாலையில், தனியார் ஓட்டலுக்கு சென்று மது அருந்திய அவர்கள், விலை உயர்ந்த காரில், இசிஆர் வழியாக கல்பாக்கம் சென்றனர்.
பின்னர், அங்கிருந்து மீண்டும் தனியார் ஓட்டல் நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்தனர். காரை ராஜ்குமார் ஓட்டினார். பூஞ்சேரி கூட்ரோடு அருகே வந்தபோது, திடீரென ஒரு பசுமாடு சாலையில் குறுக்கே ஓடியது. இதனால் ராஜ்குமார், உடனடியாக காரை இடதுபுறமாக திருப்பினார்.