காளப்பநாயக்கன்பட்டி வாரச்சந்தையை திறக்க வேண்டும்

சேந்தமங்கலம், ஜன.26: சேந்தமங்கலம் அடுத்துள்ள காளப்பநாயக்கன்பட்டியில், வாரம் தோறும் வியாழக்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெற்று வந்தது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை விரித்து வியாபாரம் செய்து வந்தனர். காளப்பநாயக்கன்பட்டி, புதூர், வெட்டுக்காடு, நாச்சிபுதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் சந்தையில் காய்கறிகள், மளிகை பொருட்கள் வாங்கி சென்றனர். இந்நிலையில், ெகாரோனா தொற்றால் கடந்த 7 மாதமாக சந்தை மூடப்பட்டன. தற்போது நோய்தொற்று குறைந்து வருவதால், மாவட்டத்திலுள்ள பல்வேறு சந்தைகள் திறக்கப்பட்டு வருகிறது. ஆனால், காளப்பநாயக்கன்பட்டி வாரச்சந்தை திறக்கப்படாததால் வியாபாரிகள் மற்றும் சுங்கம் வசூலிக்க ஏலம் எடுத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சந்தையை திறக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: