கலெக்டர் அலுவலகத்தில் லேப்டாப் கேட்டு மாணவர்கள் மனு

நாமக்கல், ஜன.26: மாணிக்கம்பாளைம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவ, மாணவிகள், நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு விபரம்:

மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்யில் 2017-2018ம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்தோம். தற்போது உயர்கல்வி படித்து வருகிறோம். எங்களுக்கு தமிழக அரசின் இலவச லேப்டாப் இதுவரை வழங்கப்படவில்லை.  80க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை. எங்களுக்கு இலவச லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: