பள்ளி மாணவிகளுக்கு மாஸ்க்

ராசிபுரம், ஜன.26:  ராசிபுரம் மெட்ரோ ஜேசிஐ சார்பில், தேசிய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாஸ்க் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் மோகன்தாஸ் தலைமை வகித்து மரக்கன்றுகள் நட்டார். தலைமையாசிரியர் பாபு, முன்னாள் தலைவர் சசிரேகா, செயலாளர் டாக்டர் புவியரசு, பொருளாளர் சக்ரவர்த்தி, முத்துக்குமார், வக்கீல் சதீஷ், செந்தில், ஹேமலதா, லட்சுமி பிரியா, சுதா, ரமாமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.  

Related Stories: