கிருஷ்ணகிரி, ஜன.26: தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் மகளிர் சுய உதவிக்குழுவினர், வாக்காளர் விழிப்புணர்வு குறித்து பதாகைகளை ஏந்தி சென்றனர். கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் துவங்கி, லண்டன்பேட்டை ரவுண்டானா, பெங்களூரு சாலை வழியாக புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பேரணி முடிந்தது. இதில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த கலைநிகழ்ச்சிகள் நடந்தது. முன்னதாக புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை மற்றும் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.