கிருஷ்ணகிரி, ஜன.26: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் தகுதி கே.பி.முனுசாமிக்கு இல்லை என செங்குட்டுவன் எம்எல்ஏ தெரிவித்தார். கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளி ஊராட்சி குமரன் மகால் அருகில், பிப்ரவரி 1ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான விழா பந்தல் அமைக்க, அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ, மாவட்ட துணை செயலாளர் வேப்பனஹள்ளி முருகன் எம்எல்ஏ, ஓசூர் மாநகர செயலாளர் சத்யா எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். பணிகளை தொடங்கி வைத்து செங்குட்டுவன் எம்எல்ஏ, செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாலக்கோடு தொகுதியில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆழியாளம் தடுப்பணையில் இருந்து தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் வழங்கும் திட்டம், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே வாணிஒட்டில் தடுப்பணை கட்டி வலது, இடதுபுற கால்வாய் வெட்டி, பெரிய ஏரி, படேதலாவ் கால்வாய் உள்பட வலதுபுற கால்வாய் வெட்டும் திட்டங்கள் 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.