போலி ஆவணம் தயாரித்து முதியவரிடம் ரூ.4.25 லட்சம் மோசடி

நாங்குநேரி, ஜன. 26:   சென்னை தணிகாசலம் நகர் பொன்னிமேடு பகுதியைச் சேர்ந்தவர் மரிய ஜான்பாஸ்கோ (70). இவரிடம் கடந்த 2016ம் ஆண்டு நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சியைச் சேர்ந்த ஆறுமுகம் (55) என்பவர் மருகால்குறிச்சி பகுதியில் உள்ள 1 ஏக்கர் மற்றும் 35 சென்ட் நிலத்தை விற்க முடிவு செய்தார். இதற்காக கிரய ஒப்பந்தம் தயாரித்த ஆறுமுகம் ரூ.6.25 லட்சத்தை முன்பணமாக பெற்றுக்கொண்டாராம். பின்னர், இந்த ஆவணத்தை மரிய ஜான்பாஸ்கோ சரிபார்த்த போது, அது போலியானது என்பதும், ஏற்கனவே மற்றொரு நிறுவனத்திற்கு அந்த நிலம் விற்கப்பட்டதும் தெரியவந்தது.  இதனால் அதிர்ச்சியடைந்த மரிய ஜான்பாஸ்கோ, இதுகுறித்து நெல்லை எஸ்.பி.யிடம் அளித்த புகாரை அடுத்து ரூ.2 லட்சத்தை மட்டும் திருப்பிக் கொடுத்த ஆறுமுகம், மீதி ரூ.4.25 லட்சத்தை 4 ஆண்டுகளாகியும் திருப்பித்தர மறுத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்தாராம். இதைத்தொடர்ந்து ஆறுமுகம் மீது வழக்குப் பதிந்து நாங்குநேரி எஸ்ஐ கார்த்திகேயன் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: