பணகுடியில் பூத் கமிட்டி பணிகள் ஆய்வுக்கூட்டம் 3ம் முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும்

பணகுடி, ஜன. 26: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெற்று 3ம் முறையாக ஆட்சி அமைக்கும் என்று பணகுடியில் நடந்த பூத் கமிட்டி பணிகள் ஆய்வுக்கூட்டத்தில் இன்பதுரை எம்எல்ஏ பேசினார்.

 ராதாபுரம் தொகுதியில் பூத் வாரியாக நியமிக்கப்பட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை, மகளிர் குழுக்கள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி இன்பதுரை எம்எல்ஏ தலைமையிலான குழுவினர் இப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்து வருகின்றனர். அந்தவகையில் பணகுடி ரகுநாதபுரம், அண்ணாநகர், தளவாய்புரம் ஆகிய இடங்களில் நடந்த ஆய்வுப்பணி கூட்டத்திற்கு இன்பதுரை எம்எல்ஏ தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் சீனிவாசன், ஜெ. பேரவை துணைச்செயலாளர் மைக்கேல் ராயப்பன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் நாராயண பெருமாள், இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் பால்துரை, மீனவர் அணி செயலாளர் அகிலன், வர்த்தக அணி செயலாளர் செல்வகுமார், மாவட்ட இணைச்செயலாளர் ஞானபுனிதா, ஒன்றியச் செயலாளர் அழகானந்தம் உள்ளிட்டோர் புதிதாக அமைக்கப்பட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை, மகளிர் குழுக்களின் பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இன்பதுரை எம்எல்ஏ பேசுகையில், ‘‘முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி ஆதரவு திரட்ட வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 3ம் முறையாக ஆட்சி அமைக்கும்’’ என்றார். கூட்டத்தில் பேரூர் செயலாளர் ஜெயினுலாபுதீன், லாரன்ஸ், பந்தல் ராஜ்,  இளையபெருமாள், பாண்டி, ராஜலிங்கம், சிவன்ராஜ், பிரேம்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை பணகுடி ஜெகன் தொகுத்து வழங்கினார்.

Related Stories: