தென்காசி வாகன பேரணியில் காங்கிரசார் திரளாக பங்கேற்பு பழனி நாடார் அறிக்கை

சுரண்டை, ஜன. 26: தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் வெளியிட்ட அறிக்கை: வேளாண் சட்டங்களை வாபஸ்பெறக் கோரி டெல்லியில் தொடர்ந்து போராடும் விவசாயிகள், இன்று நடத்தும் டிராக்டர் பேரணியை ஆதரித்து திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் இன்று காலை 10 மணிக்கு தென்காசி இனா விலக்கு பகுதியில் இருந்து புறப்படும் வாகனப் பேரணி புதிய பஸ் நிலையத்தை சென்றடைகிறது. இதையடுத்து தேசிய கொடி ஏற்றி பேரணி நிறைவு செய்யப்படுகிறது.  இப்பேரணியில் காங்கிரசார் தேசியக் கொடியுடன் இருசக்கர வாகனத்தில் திரளாகப் பங்கேற்க வேண்டும். அதற்கு முன்பாக அவரவர் பகுதிகளில் கட்சிக் கொடியேற்றி குடியரசு தினத்தையொட்டி கொண்டாட வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: