திசையன்விளையில் சாலை பாதுகாப்பு வாகன பேரணி

திசையன்விளை, ஜன.26: திசையன்விளையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பேரணி நடந்தது.  சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு நெல்லை எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவின்பேரில், வள்ளியூர் டி.எஸ்.பி உதயசூரியன் அறிவுறுத்தலின்பேரில் காவல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணியை திசையன்விளை  இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் துவக்கிவைத்தார். இந்த வாகன பேரணியில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐகள், ஏட்டுகள் உள்ளிட்ட  காவலர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்தபடி பங்கேற்றனர்.

Related Stories: