×

திருச்செந்தூர் மேலத்தெரு யாதவர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருச்செந்தூர், ஜன.26: திருச்செந்தூர் மேலத்தெரு யாதவர் மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் மேலத்தெரு மாரியம்மன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா  கடந்த 23ம் தேதி தொடங்கி 3 கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 4 மணிக்கு சங்கல்பம், 4ம் கால பூஜை, நாடி பூஜை, நாடி சந்தானம், ஸ்பர்சாகுதி, திரவ்யா குதி, பூர்ணாகுதி, மஹா யாத்தரா தானத்தை தொடர்ந்து காலை 5.30 மணிக்கு கும்பம் புறப்பாடு இடம் பெற்றது. தொடர்ந்து 5.45 மணிக்கு விமான கலசங்களுக்கு புனிதநீரால் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 9.05 மணிக்கு அம்பாளுக்கு மஹா அபிஷேகம், 12 மணிக்கு மேல் அலங்கார தீபாராதனையை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு புஷ்பாஞ்சலி, அலங்கார தீபாராதனையை தொடர்ந்து, பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கும்பம் எடுத்து முக்கியவீதிகள் வழியாக வலம் வந்து கோயிலை வந்தடைந்தது. இரவில் ஊர் பொங்கலிடுதல் வைபவமும், படைப்பு தீபாராதனையும் நடைபெற்றது.

 விழாவில் யாதவ மகாசபை தலைவர் முருகேசன், செயலாளர் நாராயணன், பொருளாளர் ராஜேஸ்வரன், உபதலைவர் சுபாகோபால், சாமியாடிகள் நாராயணன், முருகன் என்ற வீரக்கன், ராமச்சந்திரன், வேட்டைபெருமாள் மற்றும் சாந்தி பேக்கரி ராதாகிருஷ்ணன், இன்ஜினியர் நாராயணன், வெங்கடேசன், டிசிடபுள்யூ ஆறுமுகம், சுப்பிரமணியன், முப்பிடாதி, வேலு, நாகமணி, நகர திமுக பொறுப்பாளர் வாள்சுடலை, தொகுதி அமைப்பாளர் நம்பிராஜன், நகர இளைஞரணி அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட வர்த்தக அணி இசக்கிமுத்து, தோசை கடை ஆறுமுகம், ஹோட்டல் அர்ச்சனா சக்தி, முருகன், செங்கண்ணன், முருகன் கலர் லேப் கண்ணன், வீரபாகு மஹால் வீரபாகு, எஸ்கே மோட்டார்ஸ் செந்தில்ஆறுமுகம், தமிழ்ச்சங்கம் நிறுவன தலைவர் ராமகிருஷ்ணன், மீரா ஏஜென்ஸிஸ் மோகன், கணேசன், யாதவ வியாபாரிகள் சங்க தலைவர் பெரியசாமி, செயலாளர் முத்துகுமார், பொருளாளர் ஐயப்பன், முன்னாள் செயலாளர் மயில் மணி, இன்ஜினியர் செந்தில்ஆறுமுகம், வார்டு செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் கும்பாபிஷேக கமிட்டி உறுப்பினர்கள், யாதவ மகாசபை கமிட்டி உறுப்பினர்கள் உள்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இன்று மண்டல பூஜை தொடங்குகிறது. பிப்.15ம் தேதியன்று மண்டலாபிஷேக பூர்த்தி பூஜை நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழா எற்பாடுகளை திருச்செந்தூர் மேலத்தெரு யாதவ மகாசபை தலைவர் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் திருப்பணி கும்பாபிஷேக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags : Thiruchendur Upper Street Yadavar Mariamman Temple Kumbabhishekam ,devotees ,
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி