×

காயாமொழி-மெஞ்ஞானபுரம் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி,ஜன.26: காயாமொழி - மெஞ்ஞானபுரம் சாலையை சீரமைத்து தரவேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்செந்தூர் அருகே உள்ள பூச்சிக்காடு கிராமத்தை சேர்ந்த பொன்ராஜ் தலைமையில் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  காயாமொழியிலிருந்து மெஞ்ஞானபுரம் செல்லும் சாலை பழுதடைந்து போக்குவரத்திற்கு பயனற்றதாக காட்சியளிக்கிறது. இதனால், இந்த சாலையை பயன்படுத்தும் தேரிகுடியிருப்பு, வீரப்பநாடார் குடியிருப்பு, கரிசன்விளை, எள்ளுவிளை, சோலைக்குடியிருப்பு, வள்ளியம்மாள்புரம் உள்ளிட்ட கிராம மக்கள் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சாலையை காரணம் காட்டி திருச்செந்தூர்-வாகைவிளை மற்றும் திருநெல்வேலி - உடன்குடி அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே இந்த சாலையை புதிய தார் சாலையாக மாற்றித்தர வேண்டும்.இதேப்போன்று தளவாய்புரத்திலிருந்து புதுநகர்காலனி பள்ளத்தூர், மணக்காடு, வன்னிமாநகரம் வழியாக சோனகன்விளை செல்லும் சாலையும், வீரப்பநாடார் குடியிருப்பிலிருந்து சீரூடையார்புரம், சமத்துவப்புரம் வழியாக குருநாதபுரம் செல்லும் சாலையும் சேதமடைந்துள்ளது. இதனையும் சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags : road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...