செய்யாறு ஜன.26: தமிழகத்தில் விளையும் பொருட்களையே அரசு கொள்முதல் செய்து ரேசன் மற்றுமு் சத்துணவு திட்டத்தில் வழங்கிட வலியுறுத்தி பாமாயில், மசூர் பருப்பு, கோதுமைகளை கீழே கொட்டி விவசாயிகள் நூதன போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.செய்யாறு ஆர்டிஓ அலுவலகம் வாயிலில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பிரிதிநிதிகள் தமிழகத்தில் உணவு தானிய உற்பத்தியில் தேசிய அளவில் மூன்று ஆண்டு கிரீஸ் கர்மான் விருது பெற்றுள்ளனர்.
இந்நிலையில் மாநில அரசின் ரேஷன் மற்றும் சத்துணவுத் திட்டத்திற்கு 75 லட்சம் டன் பஞ்சாப்பிலிருந்து கோதுமையும், அரியானாவிலிருந்து அரிசியும், மராட்டியத்திலிருந்து மசூர் பருப்பும், மலேசியாவிலிருந்து பாமாயிலும் பிற வட மாநில விவசாயிகளிடமருந்து அத்தியாவசிய உணவு பொருட்களை அரசாங்க விலையில் கொள்முதல் செய்கின்றனர்.