டிராக்டர் திருடிய வாலிபர் கைது

திருக்கோவிலூர், ஜன. 24: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த அகரம் கிராமத்தை சேர்ந்த முரளி என்பவரின் டிராக்டரை கடந்த மூன்று நாட்களுக்கு முன் மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மணலூர்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருக்கோவிலூர் டிஎஸ்பி ராஜீ உத்தரவின்பேரில் ஆய்வாளர் செல்வம், காவல் உதவி ஆய்வாளர்கள் அகிலன், திருமால், செல்வம் தலைமையில் தனிப்படை அமைத்து தேடிவந்தனர். இந்நிலையில் ஜா.சித்தாமூர் பகுதியில் மணலூர்பேட்டை உதவி ஆய்வாளர் அகிலன், காவலர்கள் காதர்கான், பிரகாஷ், சிவஜோதி, வீரப்பன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி  விசாரித்தபோது டிராக்டரை ஓட்டி வந்த நபர் திருக்கோவிலூர் அடுத்த கொழுந்திராம்பட்டு கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் மணிகண்டன் என்பதும், இவர் கடந்த 2016ம் வருடம் வளவனூர் கிராமத்தில் டிராக்டர் திருடி வந்ததும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அகரம் கிராமத்தில் புதிய டிராக்டர் திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து மணிகண்டன் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2 டிராக்டர்கள், ரொட்டேடர் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: