புதுச்சேரி, ஜன. 24: புதுச்சேரிசுகாதாரத்துறை செயலர் அருண் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் 3,296 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி- 16, காரைக்கால்- 3, மாகே- 17 என மொத்தம் 36 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக யாரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை. மேலும், பாகூரை சேர்ந்த 63 வயது மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 644 ஆகவும், இறப்பு விகிதம் 1.66 சதவீதமாகவும் உள்ளது.