திருச்செந்தூர், ஜன. 24: திருச்செந்தூர்-நாகர்கோவில் சாலையில் ராமசாமிபுரம் பகுதியில் மழையால் சேதமடைந்து இருபுறமும் குளம் போல் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற கோரி நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணி துறையை வலியுறுத்தி தெற்கு மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின், சமூக நல்லிணக்கப் பேரவை சார்பில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் கப்பல் விடும் நூதன போராட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் தமிழ்ப்பரிதி தலைமை வகித்தார்.