சாலையில் தேங்கிய மழைநீரை அகற்ற கோரி திருச்செந்தூரில் விசிக நூதன போராட்டம்

திருச்செந்தூர், ஜன. 24:  திருச்செந்தூர்-நாகர்கோவில் சாலையில் ராமசாமிபுரம் பகுதியில் மழையால் சேதமடைந்து இருபுறமும் குளம் போல் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற கோரி நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணி துறையை வலியுறுத்தி தெற்கு மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின், சமூக நல்லிணக்கப் பேரவை சார்பில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் கப்பல் விடும் நூதன போராட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் தமிழ்ப்பரிதி தலைமை வகித்தார்.

இதில் கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ்க்குட்டி, மாவட்ட செய்தி தொடர்பாளர் வடிவேல்முத்து, உடன்குடி ஒன்றிய பொருளாளர் டேவிட் ஜான்வளவன், ஒன்றிய துணை செயலாளர்கள் கண்ணன், செஞ்சுடர், சமூக ஊடக மையம் மாவட்ட அமைப்பாளர் நடுவை பெருமாவளவன், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் முத்துக்குமார், சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் பேச்சிமுத்து, தொண்டரணி ஒன்றிய துணை அமைப்பாளர் இசக்கிமுத்து, சமூக நல்லிணக்கப் பேரவை ஒன்றிய அமைப்பாளர் வல்லரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: