×

கோவில்பட்டியில் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு ரூ.88.58 கோடி பணப்பலன் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்

கோவில்பட்டி, ஜன. 24: கோவில்பட்டியில் போக்குவரத்து கழக ஓய்வூதிய தொழிலாளர்கள் 434 பேருக்கு ரூ.88.58 கோடி மதிப்பிலான பணப்பலன்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கி துவக்கி வைத்தார். கோவில்பட்டியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதிய தொழிலாளர்களுக்கு பணப்பயன் காசோலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பயணியர் விடுதியில் நடந்த விழாவுக்கு நெல்லை கோட்ட மேலாண்மை இயக்குனர் அம்பலம்பிள்ளை தலைமை வகித்தார். பொதுமேலாளர் சரவணன், கிளை மேலாளர் (வணிகம்) சசிகுமார், கோவில்பட்டி கிளை மேலாளர் ராஜசேகரன் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக அமைச்சர் கடம்பூர் ராஜூ, நெல்லை கோட்டத்தில் 434 பேருக்கு ரூ.88 கோடியே 58 லட்சம் ஓய்வூதிய பணப்பலன்களை வழங்கினார். இதுபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் 67 பேருக்கு ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்கும் பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சின்னப்பன் எம்எல்ஏ, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் தங்கமாரியம்மாள், சந்திரசேகர், மாவட்ட பஞ்.தலைவர் சத்யா, கோவில்பட்டி யூனியன் சேர்மன் கஸ்தூரி, துணைசேர்மன் பழனிச்சாமி, நகர செயலாளர் விஜயபாண்டியன், முன்னாள் யூனியன் துணைத்தலைவர் சுப்புராஜ், நகர மாணவரணி செயலாளர் விநாயகா முருகன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரைபாண்டியன், அன்புராஜ், வினோபாஜி மற்றும் பாபு, அருணாசலசாமி, போடுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Kadampur Raju ,Kovilpatti ,pensioners ,
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!