சாத்தான்குளம் ஜன.24 தட்டார்மடம் பகுதியில் மதுவை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பதாக கிடைத்த தகவலையடுத்து எஸ்.ஐ ஐயப்பன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். முதலூர் பகுதியில் மது விற்ற தண்டுபத்தை சேர்ந்த வாசன்(56) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.