கோவை, ஜன. 24: கோவை மாவட்டத்தில் நேற்று புதிதாக 47 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையை சேர்ந்த 47 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 966 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் 6 மாதங்களுக்கு பின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 50க்கு கீழ் குறைந்துள்ளது. மேலும் நேற்று கொரோனா நோய்த் தொற்றுக்கு சனிக்கிழமை உயிரிழப்பு ஏதுமில்லை.