காங்கயம்,ஜன.24:விளைநிலங்களின் மீது அமைக்கப்படும் உயர்மின் கோபுரங்களால் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட காங்கேயம் அருகே உள்ள படியூர் பகுதி விவசாயிகள் 4வது நாளாக நேற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விருதுநகர் முதல் திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையம் வரையிலான திட்டத்தை சாலையோரமாக புதைவடகம்பியாக அமைக்க நடிக்கை எடுக்க வேண்டும். முடிவடையும் நிலையில் உள்ள திட்டங்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலத்திற்கு ஒவ்வொருமுறையில் இழப்பீடு நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் அவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அரசாணை எண் 54 அனைத்து மாவட்டங்களுக்கும் அமல்படுத்த வேண்டும். அனைவருக்கும் மாத வாடகை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.