×

ஈரோட்டில் 27 பேருக்கு கொரோனா

ஈரோடு, ஜன. 24: ஈரோடு மாவட்டத்தில் நேற்று 27பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,195ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 20பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன் காரணமாக கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 13,916பேர் குணமடைந்துள்ளனர். புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் மொத்தம் 131 பேருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி இதுவரை 148பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Corona ,Erode ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...