ஈரோடு, ஜன. 24: ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் காலியாக இருந்த 6 தட்டச்சர் பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் தட்டச்சு பணியாளர்களுக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் ஆன்லைன் மூலம் நடந்தது. ஈரோடு மாவட்டத்துக்கான கலந்தாய்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடந்தது. இதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 6 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. 2 பேர் ஈரோடு மாவட்டத்துக்குள் இடமாற்றம் பெற்றனர். சேலம் மாவட்டத்தில் இருந்து 3 பேரும், திருச்சி மாவட்டத்தில் இருந்து ஒருவரும் ஈரோடு மாவட்டத்தில் நியமிக்கப்பட்டனர். ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றி வந்த 2 பேர் திருப்பூர் மாவட்டத்துக்கும், 2 பேர் அரியலூர் மாவட்டத்துக்கும், ஒருவர் நீலகிரி மாவட்டத்துக்கும் இடமாறுதல் பெற்றனர். இடமாறுதலுக்கான பணிநியமன உத்தரவை ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் வழங்கினார்.