ஈரோடு, ஜன. 24: ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்தில் 1210 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் முன் களப்பணியாளர்களான டாக்டர், நர்ஸ், மருத்துவமனை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. ஈரோடு அரசு மருத்துவமனை, ஈரோடு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, பவானி மற்றும் கோபி அரசு மருத்துவமனை, சிறுவலுார் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 5 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. முதல் நாளில் 99 பேர் மட்டும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.