நாகர்கோவில், ஜன.24 : குடியரசு தின விழாவுக்காக நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தில் நேற்று காலை சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. நாட்டின் 72 வது குடியரசு தின விழா நாளை மறுதினம் (26ம்தேதி) கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில், நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. கலெக்டர் அரவிந்த் தேசிய ெகாடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி. பத்ரி நாராயணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் போதிய சமூக இடைவெளிகளுடன் விழாவை கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.