×

ராஜபாளையத்தில் சோலார் மின்விளக்கு, மேல்நிலைத்தொட்டி திறப்பு

ராஜபாளையம், ஜன. 24: ராஜபாளையம் தொகுதி நக்கனேரி மற்றும் தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சியில் தென்காசி எம்பி மேம்பாட்டு நிதியிலிருந்து (2019-2020) ரூபாய்.11.40  மதிப்பீட்டில் உயர் கோபுர தானியங்கி சோலார் மின்விளக்கு, ராஜபாளையம் எம்எல்ஏ மேம்பாட்டு (2018-2019) நிதியிலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் தாமிரபரணி குடிநீரை தனியாக வழங்க ரூ..6.50 மதிப்பீட்டில் பைப் லைன் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை மக்களின் பயன்பாட்டிற்கு தென்காசி தொகுதி எம்பி தனுஷ்.எம்.குமார், ராஜபாளையம் தொகுதி எம்எல்ஏ தங்கபாண்டியன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில்  ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ், கவுன்சிலர் அனுசுயா கண்ணன், யூனியன் பொறியாளர் மாலதி கலந்து கொண்டனர்.

Tags : Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!