மழையால் நெல் விவசாயம் பாதிப்பு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க தங்கம்தென்னரசு வலியுறுத்தல்

காரியாபட்டி, ஜன. 24: காரியாபட்டி கிழக்கு ஒன்றியம் முடுக்கன்குளம் மையத்திற்குட்பட்ட வேப்பங்குளம், இலுப்பைகுளம், தொட்டியங்குளம், முடுக்கங்குளம், அல்லாளப்பேரி, வல்லப்பன்பட்டி, தாமரைக்குளம், காரைக்குளம், கம்பாளி, மறைக்குளம், தேனூர், சூரனூர் ஆகிய கிராமங்களில் திமுக. சார்பில் கோலப்போட்டி நடைபெற்றது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம் தென்னரசு எம்எல்ஏ பரிசு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: தொடர்ந்து பெய்த மழையில் சேதமடைந்த நெல்லுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளேன் என்றார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன்,  மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், நகர செயலாளர் செந்தில், ஊராட்சி மன்ற தலைவர்கள் குரண்டி சிவசக்தி, கம்பாளி வாசுதேவன், பிரபாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: