கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி மீட்பு

திருவில்லிபுத்தூர், ஜன. 24: திருவில்லிபுத்தூர் அருகே அத்திகுளம் பகுதியில் 40 அடிதண்ணீர் இல்லாத கிணற்றில் கன்றுக்குட்டி தவறி விழுந்தது. திருவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணிசாமி ஆகியோருக்கு கிடைத்த தகவலின்  அடிப்படையில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று கிணற்றில் இறங்கி கயிறு கட்டி கன்றுக்குட்டியை மீட்டனர்.

Related Stories: