சிவகாசியில் மாநில அளவிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டி 3 ஆயிரம் பேர் பங்கேற்பு

சிவகாசி, ஜன. 24:  விருதுநகர் மாவட்ட அத்லெட்டிக் சங்கம் சார்பில் மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகள், சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இப்போட்டியை மாவட்ட கலெக்டர் கண்ணன் துவக்கி வைத்தார். மாவட்ட எஸ்பி பெருமாள், தமிழ்நாடு அத்லெட்டிக் சங்க இணைச்செயலாளர் லதா  முன்னிலை வகித்தனர். தமிழகம் மழுவதும் இருந்து மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 3 ஆயிரம் விளையாட்டு வீரர்,வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டனர். ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டிகள் நடைபெறுகின்றன. 14,  16, மற்றும் 18 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கு தனி தனியாக போட்டிகள் நடக்கின்றன. இப்போட்டியில் வெற்றி பெறுவோர் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப் படுகின்றனர். இப்போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட அத்லெட்டிங் சங்க நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Related Stories: