டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

ஆண்டிபட்டி, ஜன.24: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆண்டிபட்டியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்ட பொருளாளர் சென்றயபெருமாள் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். இதில் 3 வேளாண் மசோதாக்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் ஐஎன்டியுசி ஆண்டிபட்டி வட்டார தலைவர் வேல்மணி, ஒன்றிய செயலாளர் பிச்சைமணி உள்ளிட்ட தொழிற்ச் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: