×

முன்விரோதம் காரணமாக வியாபாரிக்கு அடி, உதை

தேனி. ஜன. 24: தேனியில் முன் விரோதம் காரணமாக வியாபாரி ஒருவருக்கு சரமாரியாக அடி, உதை விழுந்தது. தேனி பகவதி அம்மன் கோயில் தெருவில் சிப்ஸ் கடை நடத்தி வருபவர் அனந்தியை சேர்ந்த அழகர்சாமி(61). இவர் கடை அருகே பழக்கடை நடத்தி வருபவர்கள் அப்துல்லா(54), அல்லிநகரத்தை சேர்ந்த பூபதி(57), தெய்வமாரி(45). இந்நிலையில் அழகர்சாமி தனது கடையில் வைத்துள்ள அடுப்பு காரணமாக பழக்கடை நடத்தி வருபவர்களுக்கு இடைஞ்சல் ஏற்பட்டது. இதனால் சிப்ஸ் கடை நடத்த பழக்கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தேனி நகர் - மதுரை ரோட்டில் சென்ற அழகர்சாமியை அப்துல்லா, பூபதி, தெய்வமாரி ஆகியோர் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதுகுறித்து அழகர்சாமி அளித்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : dealer ,
× RELATED உளுந்து வியாபாரியிடம் ரூ.9 லட்சம் மோசடி