திருச்சியில்
திருச்சி, ஜன.24: திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்பியின் வழிகாட்டுதலின்படி, மொழிப்போர் தியாகிகளுக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பில் நாளை (25ம் தேதி) காலை 10 மணியளவில் கோர்ட் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகியோர் நினைவிடத்தில் மாலை அணிவித்து, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.