×

சிறைத்துறையினர் கோரிக்கை வலங்கைமான் அருகே விருப்பாச்சிபுரத்தில் குழந்தை கொத்தடிமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

வலங்கைமான், ஜன. 24: வலங்கைமான் அடுத்த விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் குழந்தைகள் கொத்தடிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருவாரூர் மாவட்டம் தொண்டு நிறுவனத்தின் மூலம் சைல்டுலைன் 1098 வலங்கைமான் வட்டம் விருப்பாட்சிபுரம் ஊராட்சி பாதிரியாபுரம் கிராமம் 100 நாள் வேலை பார்க்கும் மக்கள் மத்தியில் திருவாரூர் சைல்டுலைன்1098 சார்பாக சிறப்பு விழிப்புணர்வு செய்யப்பட்டது. தொடக்க உரையாக சைல்டுலைன் 1098 வலங்கைமான் பகுதி உறுப்பினர் முருகேஷ் பாலியல் வன்கொடுமைகள், குழந்தை கொத்தடிமை குறித்து மற்றும் குழந்தைகளின் பராமரிப்பு குறித்தும் விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.அதன் பிறகு ஸ்டீபன் மற்றும் ஜோசப் குழந்தை திருமணம் குறித்து நாடகத்தின் வழியாக விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. இறுதியாக குழந்தைகள் பாதுகாப்பு அலகு களப்பணியாளர் விஜய் நன்றி கூறினார். நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா மற்றும் பணித் தள பொறுப்பாளர் பார்வதி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags : Prisoners ,Valangaiman ,Virupachchipuram ,
× RELATED வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு...