திருவாரூர், ஜன. 24: கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகளு க்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும் என் றும் எதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் கொரோ னோ வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அனைவரும் கொரோனோ வைரசில் இருந்து பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் இருந்து அரசு தெரிவிக்கும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது அனைவரும் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும். அவ்வாறு முககவசம் அணியாதவர்களிடமிருந்து அபரா தம் வசூலிக்கப்படும்.