தேனி: தேனி மாவட்டம் போடி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். ஆண்டிபட்டியில் இருந்து சபரிமலை சென்ற வேன் சீலையம்பட்டி அருகே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த இருவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.
