திருக்காட்டுப்பள்ளி, ஜன.24: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தை கிருத்திகையை முன்னிட்டு நேற்று (23ம் தேதி) காலை சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் புஷ்ப அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. அலங்கார, ஆராதனைகளை கோயில் அர்ச்சகர் செம்மேனிநாத சிவாச்சாரியார் செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.