×

அனைத்து தியாகிகளுக்கும் மத்திய அரசின் பென்சன் வழங்க வலியுறுத்தல்

தஞ்சை, ஜன.24: தஞ்சையில் தமிழ்நாடு இந்திய தேசிய ராணுவப் பேரவை வாரிசமைப்பு சார்பில் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125வது பிறந்த நாள் பொன்விழா நடைபெற்றது. இந்த அமைப்பின் மாநில தலைவர் வேல்சாமி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், பசும்பொன் தேசியக் கழகம் மாநில துணை தலைவர் செந்தில்குமார், பார்வர்டு பிளாக் தஞ்சை மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நேதாஜி சுபாஷ்சந்திரபோசுக்கு சென்னையில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும். நேதாஜி பிறந்த நாளை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். தஞ்சை தெற்கலங்கம் சாலைக்கு நேதாஜி பெயர் சூட்ட வேண்டும். இந்திய தேசிய ராணுவப் பேரவை வாரிசமைப்பின் வாரிசுகளுக்கு அரசு சலுகைகள் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஓய்வூதியம் பெறும் அனைத்து தியாகிகளுக்கும் மத்திய அரசின் தியாகிகள் பென்சன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நிர்வாகிகள் சவுந்தர்ராஜன், தனபாலன், காமராஜ், மூர்த்தி, ஜெயவேல், கருணாநிதி, சட்ட ஆலோசகர் காசி விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : government ,martyrs ,
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்