×

மேம்பாலம் கட்டித்தர கோரிக்கை பேராவூரணி அருகே 4 பேரை வெறிநாய் கடித்து குதறியது

பேராவூரணி, ஜன.24: களத்தூர் கிழக்கு கிராமத்தில் 4 பேரை வெறிநாய் கடித்து கொதறியது. எனவே நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேராவூரணி அருகே உள்ள களத்தூர் ஊராட்சியில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இவை ஆங்காங்கே பொதுமக்களையும், தெருவில் செல்லும் சிறுவர்களையும் கடிப்பதால் பாதிக்கப்படுகின்றனர். களத்தூர் கிழக்கு கிராமத்தை சேர்ந்த பன்னீர் மனைவி சுந்தரி(56), அரங்குளவன்(80), கிருஷ்ணமூர்த்தி மகள் அபினிஸ்கா(9), கார்த்திகேயன் மகள் நிறைமதி(7), ஆகியோர்களை சுற்றி திரிந்த வெறி நாய் கடித்து குதறியது. இதில் நிறைமதி அவசர சிகிச்சை பிரிவில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் 4 மாடுகளையும் கடித்துள்ளது. தெருக்களில் பராமரிப்பு இல்லாமல் திரியும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பெருமளவு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம், தெருநாய்களை கட்டுப்படுத்தவும், வெறிநாய்களை அப்புறப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Peravurani ,
× RELATED பேராவூரணி வாக்குச்சாவடி மையங்களில்