×

ப.சிதம்பரம் பேச்சு கறம்பக்குடியில் அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டி பறிமுதல்

கறம்பக்குடி, ஜன. 24: கறம்பக்குடி அக்னி ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்த மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அக்னி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக போலீசார் மற்றும் வருவாய்த்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து அந்த பகுதியில் கறம்பக்குடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் இருந்து மணல் அள்ளி கொண்டு தென்னகர் பிள்ளையார் கோயில் அருகே ஒரு மாட்டு வண்டி வந்தது. இதையடுத்து அந்த மாட்டு வண்டியை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் ஆற்றில் இருந்து அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்து கறம்பக்குடி காவல் நிலையத்தில் வருவாய் துறையினர் ஒப்படைத்தனர். இதுகுறித்து கறம்பக்குடி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்த வாலிபரை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ