அரியலூர், ஜன.24: அரியலூர் மாவட்டம் அரியலூர் மற்றும் திருமானூர் ஆகிய வட்டாரங்களுக்குட்பட்ட பார்பனச்சேரி, கண்டிராதீத்தம் ஆகிய கிராமங்களில் தோட்டக்கலைதுறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட திட்டங்களை கலெக்டர்.ரத்னா பார்வையிட்டு ஆய்வு செய்தார் ஆய்வின்போது, மானாவாரி பகுதி வளா்ச்சி ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தின்கீழ் திருமானூர் ஒன்றியத்தில் 100 விவசாயிகள் பயன்பெறும் வகையில் 100 ஹெக்டோ் பரப்பளவில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு மானியமான ரூ.60 ஆயிரம் உட்பட ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் தோட்டக்கலை பயிர் மற்றும் ஊடு பயிர், 1 மாடு, 5 ஆடுகள், 10 கோழிகள், மண்புழு உர தயாரிப்புக்கூடம், தேனீவளா–்ப்பு, கால்நடை தங்குமிடம் மற்றும் உரக்குழி உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் விவசாயிகள் பயன்பெற்று வருவதை பார்வையிட்ட கலெக்டர் தமிழக அரசு தோட்டக்கலைத்துறையின் மூலம் கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை முறையாக பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.